Wednesday, July 27, 2011

இலண்டன் மாநகரம்

மே 6, 2011
ஆதவன் மறையும் நேரம் வந்தேன் நான்
ஆங்கிலேயர்களின் கோட்டைக்கு..
காத்திருந்தவனை கண்டேன்.
என் மணாளன்...
கண்ணில் நீர்
கையில் மலர்கொத்து
குடியேற்ற நுழைவு சரிபார்த்தலில் -
சற்றே தாமதமாகி இருந்தது (2 மணி நேரம்)
காத்திருத்தலில் சுகம் காணாமல்,
கண் கலங்கி போயிருந்தான் என் கணவன்.


No comments:

Post a Comment